புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பை சித்த மற்றும் யுனானி மருத்தவங்கள் மூலம் எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய ஆயுஷ் துறை கூறியிருப்பது கேலிக்கு ஆளாகியுள்ளது. ஆயுஷ் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சித்த மருத்துவம் தீர்வளிக்கும் என்று கூறியிருந்தது. யுனானி மருந்துகளும் கொரோனா அறிகுறியை சரி செய்யும் என்றும் தெரிவிக்கப்படடிருந்தது. மேலும், ஹோமியோபதி மருந்தான, Arsenicum album 30 என்பதை, தினமும் காலை வெறும் வயிற்றில் 3 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது, கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தக்காத்துக் கொள்ள உதவும். ஒருவேளை, பாதிப்பு தொடர்ந்தால், இதே மாதிரியில், தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். இன்ப்ளூயென்சா போன்ற நோய்த் தொற்றுக்கும், இதே மருந்தை இதே பாணியில் உட்கொண்டு நலம் பெறலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.