புதுடெல்லி: கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான கால அளவை 24 வாரங்களாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் ேநற்று, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதில் கருக்கலைப்பு செய்வதற்கான கால நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டன. குறிப்பாக கர்ப்பகால மருத்துவ முடிவு சட்டம் 1971ல் திருத்தம் செய்யப்பட்டு கர்ப்பகால மருத்துவ முடிவு திருத்தம் மசோதா 2020க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கருக்கலைப்பு செய்வதற்கான காலஅளவு தற்போதுள்ள 20 வாரம் என்பதில் இருந்து 24 வாரங்களாக அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.