புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் சூடு பறந்து வருகிறது. பாஜ வேட்பாளரை ஆதரித்து பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், டெல்லி ஷாகீன்பாக்கில் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ள வேண்டும்’’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதேபோன்று, பாஜ மேற்கு டெல்லி மக்களவை தொகுதி எம்.பி. பர்வேஷ் வர்மா, நேற்று முன்தினம் நடந்த பிரசாரத்தில் பேசுகையில், “காஷ்மீரில், பண்டிட்களுக்கு என்ன நடந்தததோ அதுபோன்று டெல்லியிலும் நடக்கக்கூடும். ஷாகீன் பாக்கில் லட்சக்கணக்கான சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியுள்ளனர். அவர்கள் உங்கள் வீடுகளில் நுழைந்து உங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யக்கூடும்” என்று பேசினார். அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சைக்குள்ளானது.