புதுடெல்லி: வன்முறையை தூண்ட 120 கோடி பணபரிமாற்றம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க கோரிய அமலாக்கத் துறையிடம் கேரள அமைப்பும், என்ஜிஓ.வும் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளன. கேரளாவை சேர்ந்த அமைப்பு ஒன்றின் மீது கடந்த 2018ம் ஆண்டு பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு ெசய்தது. இந்நிலையில், சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறையை தூண்ட, ₹120 கோடியை கேரள அமைப்பின் வங்கி கணக்கில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கேரள அமைப்பு மறுத்தது. மேலும், கேரள அமைப்புக்கும், தன்னார்வ அமைப்புக்கும் நேற்று முன்தினம் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.