திருச்சி: திமுகவின் முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேருவின் நியமனம் திமுகவிற்கு வலு சேர்க்குமா? திருச்சியில் 31ம் தேதி நடக்கும் மாநாடு என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பன போன்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், வெளியிட்டுள்ள அறிவிப்பில்; திமுக முதன்மை செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார், எனவே தற்பொழுது அவருக்கு பதிலாக திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.