குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தேயிலை உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் முதல் ஜனவரி வரை பனிப்பொழிவு ஏற்படுகிறது. இதனால் செடி கொடிகள் மற்றும் புல் தரைகள் பனி நிறைந்து வெள்ளை கம்பளம் விரித்ததுபோல் காணப்படுகிறது. ஆனால் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக ஜனவரி மாதம் இறுதியில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகள் கருகியுள்ளது.