தேனி, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்புவோர் ஜன.27ம் தேதி முதல் ஜன.31ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ள எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை தனித்தேர்வர்களாக எழுத உள்ளோர் வருகிற 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி, கம்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய சேவைமையங்களுக்கு சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 சேர்த்து ரூ.175ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம். விண்ணப்பத்தின்போது, விண்ணப்பதாரர்கள் பள்ளி சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே இணைத்து சமர்பிக்கவேண்டும்.