வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி பலி

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரியை சேர்ந்தவர் நந்தகுமார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் நிவேதினி(14). இவர் கே.வி.குப்பம் அருகே ஒரு தனியார் பள்ளியில் 9ம் படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் வகுப்பறையில் இருந்த நிவேதினி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், ‘நிவேதினியின் அண்ணனும் 5 ஆண்டுக்கு முன்பு இதேபோன்று மயங்கி விழுந்து இறந்ததாக  பெற்றோர் தெரிவித்தனர்’ என்றனர்.

Related Stories: