புதுடெல்லி: டெல்லியில் நடந்த விழாவில் 49 சிறுவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘பால் சக்தி புரஸ்கார் விருது’களை வழங்கி பாராட்டினார். சமூக சேவை, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், புதிய கண்டுபிடிப்பு, வீர தீர செயல்களில் சிறந்து விளங்கிய சிறுவர்களுக்கு, ‘பால் சக்தி புரஸ்கார் விருது’ வழங்கும் விழா, ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த விருது பெறுவோருக்கு ₹1 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த விழாவில் 5 முதல் 18 வயதுக்குட்பட்ட 49 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.