வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் நோய் தீர்க்கும் அரசு மருத்துவமனை முன்பு நோய் ஏற்படுத்தும் சாக்கடை இருப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி ஏராளமானோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு நுழையும் இடத்தையொட்டி பெரிய சாக்கடை செல்கிறது. அந்த சாக்கடை மூடப்படாமல் உள்ளதால் அடிக்கடி சாக்கடை அடைத்து கழிவுநீர் வெளியேறி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் கார் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தும் இடம் உள்ளது. ஆட்டோ எடுக்க வருகின்றவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.