காரைக்கால்: காரைக்கால் மற்றும் வேதாரண்யத்தில் எரிவாயு கிணறுகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். காரைக்காலில் நிலம் கையகப்படுத்த வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. மேலும் மக்கள் தொகை அதிகமான இடங்களில் ஆயிரக்கணக்கான மீட்டர் ஆழத்துக்கு துளையிடும் போது நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.