சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை குறித்து விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தனது அறிக்கையை நேற்று முதல்வரிடம் சமர்ப்பித்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரை, கோவை, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த 2017 ஜனவரி 14 முதல் 23ம் தேதி வரை போராட்டம் நடந்தது. சென்னையில் நடந்த போராட்டத்தின் முடிவில் வன்முறை வெடித்தது.இது தொடர்பாக விசாரிக்க, விசாரணை ஆணையம் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டார். இவர், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் ஒன்றரை மாதம் நீட்டித்து தமிழக அரசு கடந்த 15ம் தேதி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஜல்லிக்கட்டு விசாரணை அறிக்கை இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிந்து விடும் என்று அறிவித்தார்.