புதுடெல்லி:போலி செய்திகள் தற்போது புதிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். டெல்லியில் பத்திரிக்கை துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: பிரேக்கிங் நியூஸ் என்ற நோயானது ஊடகங்களை ஆட்கொண்டுள்ளது. போலிச் செய்திகள் புதிய அச்சுறுத்தலாக உள்ளது. இதன் காரணமாக பத்திரிகையாளர்களுக்கான கட்டுப்பாடு மற்றும் பொறுப்பு என்ற அடிப்படை கொள்கை குறைந்து வருகிறது. போலிச் செய்திகளை வெளியிடுவோர் தங்களை பத்திரிகையாளராக அறிவித்து உன்னதமான தொழிலை களங்கப்படுத்துகின்றனர்.