சென்னை: ஊராட்சிகளில், ‘செக்’ பரிவர்த்தனைக்கான அனைத்து அதிகாரங்கள் தலைவர், துணை தலைவருக்கு தான் உள்ளது. அதிகாரத்தை அவர்கள் தவறான வழியில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊராக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து தனி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மூலம் நடந்து வந்த நிர்வாக முறைக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து தேர்வான தலைவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் அந்தெந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு பொறுப்பு மாற்றம் ெசய்வது குறித்து வழிகாட்டி உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன்படி, திருவள்ளூர் கலெக்டர் அனுப்பி உள்ள உத்தரவில், ‘ஊராட்சியில் பராமரிக்கப்படும் அனைத்து பதிவேடுகள் மற்றும் ரசீது புத்தகங்களை தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். பதிவேடுகள் அனைத்தும் ஊராட்சி அலுவலகத்தில் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும்.