அபுதாபி: ‘இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டங்கள் தேவையில்லாதது,’ என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. சில நாட்களுக்கு முன், இது தொடர்பாக பேசிய வங்கதேச வெளியுறவு அமைச்சர் அப்துல் மொமேன், ‘குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதே நேரத்தில் இவற்றால், அந்நாட்டில் உறுதியற்ற நிலை ஏற்பட்டால் அது அண்டை நாடுகளையும் நிச்சயம் பாதிக்கும்,’ என்று கூறியிருந்தார்.