மொசூல்: ஈராக்கில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பேசி வந்த 250 கிலோ எடை கொண்ட ஐஎஸ் மதபோதகர் தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவராக முப்தி அபு அப்துல் பாரி இருந்து வந்தார். 250 கிலோ எடை கொண்ட இவரால் ஒரு அங்குலம் கூட நகர முடியாது. இதனால், படுக்கையில் இருந்தபடியே பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசி வந்தார். ஐஎஸ் அமைப்புக்கு கட்டுப்படாத, விசுவாசத்துடன் நடந்து கொள்ளாத மத போதகர்களை கொல்லவும் உத்தரவிட்டு வந்தார்.