புதுடெல்லி: டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தேச பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கைது செய்ய டெல்லி காவல் ஆணையருக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார். தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் எவரை வேண்டுமானாலும் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கலாம். இந்தியர்களை மட்டுமின்றி, இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினரையும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க முடியும். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட ஆட்சியர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு இருக்கிறது.