வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் ஒவ்வொரு காணும் பொங்கலன்றும் கிராம மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதற்காகவும், விவசாயம் நல்ல முறையில் இருக்க வேண்டியும், குள்ளநரி விடும் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக குள்ளநரி கிடைக்காததால் முயல் விடும் திருவிழாவாக மாற்றினர். விழாவையொட்டி நேற்று முயலுக்கு மாலை அணிவித்து குங்குமமிட்டு டிராக்டரில் கொண்டுவந்தனர். பின்னர் முயலை நான்கு திசைநோக்கி எடுத்து செல்லப்பட்டு விடப்பட்டது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது உரசியபடி சென்றால் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படாது என்பது நம்பிக்கை. இதையொட்டி முன்னதாக குழந்தைகளின் தலையில் முயலை ெதாட்டு எடுத்தனர்.