நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு

டெல்லி : நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசு தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. டெல்லி ஆளுநர் நிராகரித்த நிலையில், கருணை மனு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: