புவனேஷ்வர்: ஒடிசாவில் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில், மோதியதில் 15 பேர் காயமடைந்தனர். மும்பையில் இருந்து ஒடிசா மாநிலம், புவனேஷ்வர் நோக்கி லோக்மன்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது.
கட்டாக் அருகே காலை 7 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது சரக்கு ரயில் மீது மோதியது. இதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. மேலும், 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கின. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.