திருவனந்தபுரம்: சபரிமலையில் இந்த வருட மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த டிச,30ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 31ம் தேதி முதல் மகர விளக்கு கால பூஜைகள் தொடங்கின. தினமும் கணபதிஹோமம், உஷபூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடந்தது. மண்டல காலத்தை போலவே மகர விளக்கு காலத்திலும் சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இந்த நிலையில் நேற்று மகர விளக்கு பூஜை நடந்தது. முன்னதாக நேற்று அதிகாலை சுமார் 2.09 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடந்தது. அதிகாலையில் இந்த பூஜை நடந்ததால் நேற்று முன்தினம் இரவு கோயில் நடை சாத்தப்படவில்லை. நேற்று மாலை பந்தளத்தில் இருந்து ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. 5.45 மணியளவில் இந்த ஊர்வலம் சரங்குத்தியை அடைந்தது. அங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகிகள் திருவாபணரத்துக்கு வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து இந்த ஊர்வலம் சன்னிதானத்தை நோக்கி புறப்பட்டது.