சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே எம்.புதூரை சேர்ந்த சுந்தரபாண்டியன் சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 13ம் தேதி இரவு 10.15 மணிக்கு எனது மகன், மகள் மற்றும் உறவினர்கள் சென்னையில் இருந்து வருவதையொட்டி அவர்களை அழைத்து செல்ல திருக்கோஷ்டியூர் கோவில் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அப்போது திருக்கோஷ்டியூர் போலீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் பாண்டியராஜன் என்ற போலீஸ் என்னிடம் குடிபோதையில் தவறான வார்த்தைகளை பேசினார். ரோந்து பணியில் இருந்த எஸ்ஐ ஒருவரும் வந்து, பாண்டியராஜன் குடிபோதையில் இருப்பதையறிந்து என்னை கிளம்ப சொன்னார்.