லண்டன் : பிரிட்டன் அரசக் குடும்பத்தில் இருந்து மனைவியுடன் பட்டத்து இளவரசர் ஹாரி பிரிந்து செல்வதற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து பிரிட்டன் ராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமது பேரன் ஹாரி குடும்பத்தின் எதிர்காலம் குறித்து அரசு குடும்பத்தினர் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தியதாக அதில் ராணி தெரிவித்துள்ளார். புதிய வாழ்க்கையை தொடங்க முடிவு செய்திருக்கும் ஹாரிக்கும் மேகனுக்கும் ஆதரவு தெரிவிப்பதாகவும் அதில் ராணி குறிப்பிட்டுள்ளார். அரசுக் குடும்பத்தில் உறுப்பினர்களாக இருந்த போதும் சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற விருப்பத்தை மதிப்பதாகவும் அவர்களை புரிந்துக் கொள்வதாகவும் ராணி எலிசபெத் கூறி இருக்கிறார்.