டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் இந்தியா வர இருக்கிறார். கடந்த 7ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினார். 2 நாடுகளுக்கு இடையேயான வலுப்படுத்தும் விதமாக இரு தலைவர்களும் உரையாடினர். இந்த உரையாடலின் போது, இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பு ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து வரும் பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.