வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் அடுக்குமாடி கட்டிடங்களில் கட்டுக்கடங்காமல் கொளுந்து விட்ட எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். பவுண்ட் புரூக் என்ற இடத்தில் கட்டுமான பணி நடந்து வரும் 5 மாடி கட்டிடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே, அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் வணிக வளாகங்களுக்கும் தீ பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.