ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் காத்திருப்பதாக எச்சரித்துள்ளனர். ராஜபாளையத்தில் முக்கிய சாலைகளில் மாடுகள், நாய்கள் சுதந்திரமாக உலா வருகின்றன. இரவு நேரங்களில் அறியாமல் வரும் வாகன ஓட்டிகள், கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், கால்நடைகளும் இறக்கின்றன. இவ்வாறு இறக்கும் கால்நடைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துவதும் இல்லை. சில நேரங்களில் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். ஆனால், இந்த நடவடிக்கையை தொடர்ச்சியாக செய்வதில்லை.