ஊட்டி: நீலகிாி மாவட்டத்தில் உறைப்பனி பொழிவு தீவிரம் காட்டி வரும் நிலையில் தேயிலை செடிகள் கருக துவங்கியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நீலகிாி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக உறைபனி பொழிவு இருந்து வருகிறது. இதில் தாவரவியல் பூங்கா, குதிரைபந்தய மைதானம், தலைகுந்தா, சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளில் உள்ள புல் மைதானங்களில் உறைபனி கொட்டுகிறது. மாலை, இரவு, அதிகாலை நேரங்களில் உறைபனி பொழிவு காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகபட்ச வெப்ப நிலையில் 9 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. உறைபனி பொழிவு காரணமாக புற்கள், செடி கொடிகள் கருகி காய்ந்துள்ளன.
மாவட்டத்தில் கடும் உறைபனி பொழிவு: கருகி வரும் தேயிலை செடிகள்: விவசாயிகள் வேதனை
- மாவட்டம்: கருப்பு தேயிலை தாவரங்கள்: விவசாயிகள் வேதனை
- மாவட்டம்
- கடுமையான உறைபனி மழை: கருப்பு தேயிலை தாவரங்கள்: விவசாயிகள் வேதனை