டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உயர் தளங்களில் இருந்து அமைதியான பார்வையாளர்களிடம் மட்டுமே பேசுகிறார் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளை எதிர்கொள்ள பிரதமர் தயாராக இல்லை. குடியுரிமை சட்டத்திருத்தம் என்பது குடியுரிமையை வழங்குவதாகும் அதை எடுத்துச் செல்லக்கூடாது என பிரதமர் கூறுகிறார் எனவும் கூறியுள்ளார்.