மும்பை: ‘மத்திய அரசு உத்தரவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும்,’ என ராணுவ தலைமை தளபதி நரவானே தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே ஆதரவு தெரிவித்துள்ளார். ராணுவ தலைமை தளபதி நரவானே நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை பொறுத்தவரை, ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒரு பகுதி என்று பல ஆண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு உத்தரவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ராணுவம் மீட்கும்’ என்று கூறினார்.