சபரிமலையில் 15ல் மகரவிளக்கு பூஜை

திருவனந்தபுரம்: சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மகரவிளக்கு பூஜை நாளை மறுநாள் 15ம் ேததி நடக்கிறது இதை ஒட்டி ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணம் இன்று பகல் பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. 15ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஊர்வலம் சன்னிதானத்தை அடையும். பின்னர் திருவாபரணம் ஐயப்ப விக்ரகத்தில் அணிவித்து தீபாராதனை நடத்தப்படும். அப்ேபாதுதான் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும். மகரவிளக்கு பூஜை க்காக சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மகரஜோதி தென்படும் பகுதிகளில் பக்தர்கள் தற்போதே குடில்கள் அமைத்து தங்கியுள்ளனர். பூஜைக்கான ஏற்பாடுகள்் செய்யப்பட்டுள்ளதாக ேதவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: