சென்னை: விஎஸ்டி டிராபி டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ரிஷி பாவேந்தன், குந்தனா ஸ்ரீ சாம்பியன் பட்டம் வென்றனர். பெருங்குடி கிருஷ்ணன் டென்னிஸ் அகடமியில் விஎஸ்டி டிராபி டென்னிஸ் போட்டிகள் நடந்தன. அதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ரிஷி பாவேந்தன் - மோனில் லோட்லிகர் மோதினர். அதில் ரிஷி பாவேந்தன் 6-1, 6-3 என நேர்செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.