காஞ்சிபுரம்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 34வது தேசிய டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்
இருந்து 238 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்திய டேக்வாண்டோ சங்கத்தின் தலைவர் ரமணய்யா இந்த போட்டிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் இருந்து மாஸ்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் 28 பேர் இந்தபோட்டிகளில் பங்கேற்றனர். இந்த தொடரில் தமிழக அணி ஒட்டுமொத்தமாக 3ம் இடத்தைப் பிடித்தது.