சென்னை: வடசென்னையில் வசிக்கும் சிறுவர்களுக்கான யு-15 ஐவர் குழு கால்பந்து போட்டி நடைபெற்றது. குடிசைவாழ் மக்களிடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்டெட்ஸ், க்ரை அமைப்பு இணைந்து இந்த போட்டியை நடத்தின. வியாசர்பாடி எஸ்எம் நகர் கால்பந்து திடலில் நடந்த இந்தப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் 15வயதுக்கு உட்பட்ட தலா 5 பேர் விளையாடினர். இறுதிப் போட்டியில் கார்த்திக் தலைமையிலான ஸ்டெட்ஸ் அணியும், இர்பான் தலைமையிலான ‘சாதிப்போம்’ அணியும் களம் கண்டன. அதில் ஸ்டெட்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.