பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். அரை இறுதியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா 6-7 (10-12), 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 48 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு அரை இறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 3-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பெத்ரா குவித்தோவாவை (செக்.) வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் பிளிஸ்கோவா - கீஸ் மோதுகின்றனர்.