புதுடெல்லி: ரயில்வே சேவைகள் இணைப்பு ஒருதலைப்பட்சமான முடிவு என்றும், இதனால் பாதுகாப்பான ரயில் சேவையில் எதிர்மறையான விளைவு ஏற்படும் என்றும் 13 ரயில்வே மண்டலங்கள் மற்றும் 60 டிவிசன்களைச் சேர்ந்த சிவில் சர்வீஸ் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரயில்வேயில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி, கணக்கு துறை, பணியாளர் துறை உள்ளிட்ட 8 துறைகளை இணைப்பதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த வாரம் அறிவித்தார். ரயில்வே அதிகாரிகளுடன் 2 நாள் கலந்துரையாடல் நடத்தி இம்முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆனால், இதற்கு பெரும்பாலான அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2 நாள் கலந்துரையாடலில் பொறியியல் சேவைகள் மூலம் பணியமர்த்தப்பட்ட பொது மேலாளர்களே தலைமை தாங்கி உள்ளனர்.