புதுடெல்லி: ‘ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டத்தில், மாநில அளவிலான சிறிய கருத்து வேறுபாடுகள், போட்டிகளுக்கு இடம் அளிக்கக் கூடாது,’ என மார்க்சிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் 13ம் தேதி கூட்டப்படும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று தெரிவித்தார். புதனன்று நடந்த நாடு தழுவிய அளவிலான வர்த்தகர்களின் போராட்டத்தின்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரியை சேர்ந்த சிலர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக மம்தா கூறியிருந்தார்.