பெஷாவர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த அடுத்த நாளே, கைபர் பக்துன்வா மாகாணத்தை சேர்ந்த சீக்கிய இளைஞர் பர்விந்தர் சிங் கடந்த 4 ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். வன்முறையில் அவர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இது, இந்திய சீக்கியர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் சீக்கியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.இதனால், பாகிஸ்தான் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. இறந்த சீக்கிய வாலிபருக்கு வரும் 28ம் தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவரை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த 18 வயதான மணப்பெண் பிரேம் குமாரிதான் கூலிப்படை ஏவி பர்விந்தர் சிங்கை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.