பழநி: பழநிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த நடைமேடை புதர்மண்டி கிடந்ததால் பட்டாலியன் போலீசார் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி துவங்குகிறது. இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம். எனினும், அரையாண்டு தேர்வு மற்றும் பொங்கல் விடுமுறை காலங்களிலேயே ஏராளமானோர் பாதயாத்திரையாக வருவது வழக்கம். பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக திண்டுக்கல்லில் இருந்து பழநி வரை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பிரத்யேக நடைமேடை அமைக்கப்பட்டிருந்தது.