பெங்களூரு: பெங்களூருவில் பத்திரிக்கையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட்டின் தன்பாத்தில் தலைமறைவாக இருந்த ருஷிகேஷ் தேவ்திகாரை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது. 2017ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி, பெங்களூர் நகரில், தனது வீட்டுக்கு வெளியே வைத்து, கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னதாக, 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புனேவில் தபோல்கர் வாக்கிங் சென்றபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு, பிப்ரவரியில் கோவிந்த் பன்சாரே மற்றும் ஆகஸ்டில், எம்.எம்.கல்பூர்கி ஆகியோரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.