திருவனந்தபுரம்: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கொச்சி மரடில் 4 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிப்பது தொடர்பாக இன்று ஒத்திகை நடக்கிறது. கேரள மாநிலம் கொச்சி மரடு பகுதியில் ‘ஜெயின் கோரல் கோவ்’, ‘ஆல்பா ஷெரின்’, ‘ஹோலி பெயித் ஹெச்2ஓ’, ‘கோல்டன் காயலோரம்’ ஆகிய 4 அடுக்குமாடி குடியிருப்புகள் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 4 அடுக்குமாடி குடியிருப்புகளையும் இடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் இந்த அடுக்குமடி குடியிருப்புகளின் சுவர்களில் துழைப்போட்டு வெடிப் பொருட்களை நிரப்பும் பணி நடந்தது.