கோபி: கோபி அருகே உள்ள பாரியூரில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலானது 18 பாளையங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 26ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த 6ம் தேதி சந்தனகாப்பு அலங்காரமும், 8ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் திருக்கோடியும், நந்தா தீபமும் ஏற்றப்பட்ட பின்னர் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 12 டன் விறகுகளை கொண்டு உருவாக்கப்பட்ட 60 அடி நீள குண்டத்திற்கு தலைமை பூசாரி லோகநாதன் சிறப்பு பூஜை செய்தார். அதைத்தொடர்ந்து தலைமை பூசாரி லோகநாதன் முதலில் குண்டம் இறங்கியதை தொடர்ந்து கோயில் பூசாரிகள் வரிசையாக குண்டம் இறங்கினர்.
கோபி அருகேயுள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா: பக்தர்கள் பரவசம்
- பெரியருத்து காளியம்மன் கோயில்
- பக்தர்கள்
- கோபி குண்டம் விழா
- கோபி
- பெரியருத்து கலியம்மன் கோயில்: குண்டம் திருவிழா