திருச்சி: காவிரி டெல்டா கடைமடைப் பகுதியில் சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியிருப்பதால் நேரடி நெல்கோள்முதல் நிலையங்களை அரசு உடனடியாக திறக்கவேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 11 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 1லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சம்பா சாகுபடி நடைபெற்றது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு மேட்டூர் ஆணை 5 முறை நிரம்பியதால் சம்பா சாகுபடி நல்லநிலையில் அதிக விளைச்சலுடன் உள்ளது. தற்போது டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகையில் அறுவடைப் பணி பல்வேறு இடங்களில் தொடங்கியுள்ளது.