செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் இரயில் பெட்டிகள் குறைக்கப்பட்டதாக கூறி 2வது நாளாக 500 பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி-சென்னை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் இரயிலில் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டு இரயில் இயக்கப்பட்டு வந்தது. இதனை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 4 பெட்டிகள் குறைக்கப்பட்டு 8 பெட்டிகளுடன் இயக்கப்படுவதால் ஆத்திரமடைந்த பயணிகள் இரயிலை மறித்தனர்.