ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழக அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக், அஷ்வின்

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில், மும்பை மற்றும் சர்வீசஸ் அணிகளுக்கு எதிராக நடைபெற உள்ள லீக் ஆட்டங்களுக்கான தமிழக அணியில் தினேஷ் கார்த்திக், ஆர்.அஷ்வின் இடம் பெற்றுள்ளனர். நடப்பு ரஞ்சி சீசனில் பெரிய அளவில் வெற்றிகளைக் குவிக்க முடியாமல் தடுமாறி வரும் தமிழக அணி, எலைட் பி பிரிவில் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று பின்தங்கியுள்ளது. இந்த நிலையில், அடுத்த 2 லீக் ஆட்டங்களில் பலம் வாய்ந்த மும்பை (ஜன. 11-14) மற்றும் சர்வீசஸ் (ஜன. 19-22) அணிகளின் சவாலை எதிர்கொள்கிறது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள இந்த 2 லீக் ஆட்டங்களுக்கான தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அனுபவ வீரர்கள் தினேஷ் கார்த்திக், ஆர்.அஷ்வின் இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். தமிழக அணி: விஜய் ஷங்கர் (கேப்டன்), அபினவ் முகுந்த், கங்கா தர் ராஜு, சூரிய பிரகாஷ், கவுஷிக் காந்தி, பாபா அபராஜித், தினேஷ் கார்த்திக், ஆர்.அஷ்வின், சாய் கிஷோர், எம்.சித்தார்த், டி.நடராஜன், என்.ஜெகதீசன், கே.விக்னேஷ், கே.முகுந்த், பிரதோஷ் ரஞ்சன் பால்.

Related Stories: