திருமலை: தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவை சேர்ந்த பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தனி பஸ்சில் சென்றனர். சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்றிரவு மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு பஸ்சில் வந்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த காசிபண்டா அருகே பூதலப்பட்டு-நாயுடுபேட்டை நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த அரசு சொகுசு பஸ்சும், பக்தர்கள் சென்ற பஸ்சும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பஸ்களின் முன்பகுதியும் நொறுங்கியது. 2 பஸ்களில் இருந்த 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். சொகுசு பஸ் டிரைவரான பெனுமலூரை சேர்ந்த ரமேஷ், மற்றும் கிளீனர் கிருஷ்ணா மாவட்டம் உய்யூறு கிராமத்தை சேர்ந்த பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.