கரூர்: கரூர் வெங்கமேடு அம்மன் நகர் முதல் தெருவில் விரைவில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு அம்மன் நகர் முதல் தெரு பகுதியில் பழுதடைந்த சாலையை தார்ச்சாலையாக்கும் வகையில் பெயர்க்கப்பட்டு புதிதாக ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், சில காரணங்களால் பணிகள் பாதியில் நிற்கிறது. இதன் காரணமாக இந்த சாலையின் வழியாக நடந்தோ, வாகனங்களில் செல்வதற்கோ பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.