தஞ்சை தமிழ் பல்கலை. துணை வேந்தர் நியமனத்தை ரத்து செய்யும் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை

மதுரை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தரான பாலசுப்ரமணியன் என்பவருக்கு துணை வேந்தருக்கான கல்வி தகுதி இல்லை. மேலும் விதிமுறைகளை மீறு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேலுமணி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனத்தை ரத்து செய்து அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் பாலசுப்ரமணியன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவு பிறப்பித்தது. அதில் பாலசுப்ரமணியனின் நியமனம் விதிமுறைகளை மீறி செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த நியமனம் செல்லாது என நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் நியமனத்தை ரத்து செய்யும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், ரவீந்திரன் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது. துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: