மதுரை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தரான பாலசுப்ரமணியன் என்பவருக்கு துணை வேந்தருக்கான கல்வி தகுதி இல்லை. மேலும் விதிமுறைகளை மீறு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேலுமணி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனத்தை ரத்து செய்து அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.