பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டோரம் உள்ள பயணிகள் நிழற்குடை பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் பொன்னாயூர், கருமாபுரம், நரசிங்காபுரம், ராமபட்டிணம், மண்ணூர், கோபாலபுரம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ரோட்டோரம், சுமார் 10ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால், இந்த கிராமங்களில், பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நிழற்குடை, தற்போது பழுதாகி ஆங்காங்கே கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் தெரிவதுடன் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.