குன்னூர்: முதியோர் உதவித்தொகை வாங்க நாள் முழுக்க உணவின்றி காத்திருந்த முதியவர்கள் அதிகாரிகள் வராததால் அதிருப்தியடைந்தனர்.
குன்னூர் மாடல் ஹவுஸ், ரேலி காம்பவுண்ட், ராஜாஜி நகர், போன்ற பகுதிகளில் உள்ள முதியோர்க்கு உதவித்தொகை மாதம் தோறும் அங்குள்ள சமுதாய கூடத்தில் வைத்து வழங்கப்படுகிறது. நேற்று முதியோர் உதவித்தொகை வழங்குவதாக கூறி அனைவரையும் அழைத்துள்ளனர். இந்த பகுதியில் உள்ள முதியோர்கள் காலை ஏழு மணி முதலே சமுதாய கூடத்தில் காத்திருந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக முறையான மின் கட்டணம் செலுத்தாததால் அதிகாரிகள் சமுதாய கூடத்தில் மிண் இணைப்பை துண்டித்துள்ளனர்.