வாஷிங்டன் : ஈரான் நாட்டுடன் மோதல் போக்கை கையாண்டு வரும் அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றனர். ஈரான் நாட்டு தலைமை ராணுவ தளபதி காசி சுலைமாணியை அமெரிக்காக் கொன்றதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இந்த சூழலுக்கு அதிபர் ட்ரம்பின் ஆணவ போக்கை காரணம் என்று கூறி, அமெரிக்காவில் பல இடங்களில் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.